Monday 25 April 2011

என் கண்ணீர் துளிகள்


பல போராட்டங்களுக்கு பிறகு, பல அவமானங்களுக்கு பிறகு,
இதோ மேல வந்துவிட்டேன் என்ற போது
மீண்டும் என்னை கீழே தள்ளுகிரானே
அந்த ஆண்டவனை நான் பழிக்கின்றேன்

என்னை போன்ற ஆட்களுக்கு வர கூடாத
ஆசைகளை எல்லாம் வர வழைத்து
என்னை துன்பத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்
அந்த இறைவனை நான் பழிக்கின்றேன்

நம்பிக்கையே அச்சாரம் என்று இருந்தேன்,
அது தான் எனது முட்டாள்தனம் என
என்னை கேலி செய்து என் வாழ்க்கையை அழித்து
என்னை உயிருடன் கொன்று புதைத்த
அந்த கடவுளை நான் பழிக்கின்றேன்

எனது வார்த்தைகள் வேடிக்கையாய் இருந்தாலும் ,
எனது  வாழ்க்கை அடுத்தவர்களது வேடிக்கைக்கு அல்ல ,
இது வரை நான் பெற்ற ஏமாற்றங்கள் என்னை பாதித்ததில்லை,
ஏனெனில் நான் யாரையும் நம்பியதில்லை,
முதன் முறையாக என்னை விட ..... மிகவும் நம்பினேன்,
கிடைத்தது அருமையாக ஏமாற்றம், 
முதுகில் குத்துபட்டு காயங்களுடன்...
என் எதிரிகள் கூட என்னை முகத்துக்கு நேர் தான் தாக்கினர்,
வலித்தது இருந்தும் எனக்குள் இருந்த தன்னம்பிக்கை,
என்னை அடுத்த நொடியில் மீட்டு எடுத்தது.
ஆனால் இப்போது...

     நான் அழுவது எனக்குள் மட்டுமே...

1 comment: