Saturday 29 October 2011

அவள்...


உறக்கம் கூட பொய்த்து போயின
உன் உரையாடல் நீண்ட போது....
கண்களும் இமைக்க மறுத்தன 
உன் விழி இரண்டில் நான் தெரிந்த போது...
கடல் அலைகளும் அழகிய கவிதை என எடுத்து சென்றன
உன் பெயரை கரையோரம் நான் எழுதிய போது...

சுவடுகள்


கனவு வானில் கற்பனை உலகில்
என்னுள் வந்து மனச் சிறகையும் தந்து 
பறக்க எண்ணிய வண்ணம்
சிறகுகளை கேட்கிறாய்...
முயற்சித்தேன், முடியாமல் தோற்றேன்...
அழியாத நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கோர்க்கிறேன் 
மாலையாக...

சொல்லித் தெரிவதில்லை...


உள்ளத்தின் கதவரையில் 
உயிரென்னும் தூரிகைக் கொண்டு
நான் வரைந்த முதல் ஓவியம் உன் முகம் தான்...
உன் பிறப்பு யாருக்காக என்று தெரியவில்லை
ஆனால்,
நான் வாழ்வது உனக்க மட்டும் தான்...

நினைவுகள்


பசுமையான நினைவுகள் 
என் மனதில் உன்னை பற்றி சேதி சொல்ல,
வெண்ணிலவே ,
நீ தொடும் தூரத்தில் இல்லை என்றாலும்,
அவள், உன்னை பார்க்கும் நேரத்தில்
என்னை பற்றி எண்ணச் செய்...

இன்னும் ஒரு முறை...


சொல்ல நினைத்த சொற்கள் தடுமாறிய போதும்
விழிகள் அவற்றை கண்டு கொண்டன...
சிதறும் புன்னகையும் சட்ட்று நெளிந்த போதும்
அன்பு அவற்றை கவிதையாகவே எடுத்துக் கொண்டன...
ஆயிரம் வார்த்தைகள் சொல்லியும் கேட்கவில்லை என்ற போதும்
இன்னும் ஓராயிரம் வார்த்தைகளில் தொடர்கிறது...

அலைகள்....

அலைகள்....
என் உள்ளத்தில் துன்பத்தின் சாரல் மழையாக பொங்கும் வேலை,
விலகி நிற்கும் உனக்குள்ளும் சாரல்கள் அடிக்குமா?
மனதை விட்டு 
என் நினைவுகள் உன்னை விட்டு அகன்ற போதிலும்,
உன்னைப் பற்றிய நினைவுகள் 
எனக்குள் சுவடுகளாய் விட்டுச் சென்றதற்கு நன்றி.....

Saturday 22 October 2011

நீ தான்...


நீ தான்...

உன் கண்களில்
சூரிய, சந்திரர்கள் இல்லை,
உன் பேச்சு நடையில் 
தென்றல் தவழ்ந்து வரவில்லை,
உன் சொற்களில் 
இசை எழுவதும் இல்லை,
இருந்தபோதும் 
நான் காணும் கனவுகளில் தோன்றினாய்,
நான் சுவாசிக்கும் காற்றில் 
இரண்டறக் கலந்து வந்தாய்,
என்றும் என்னுடன்,
என் உள்ளத்தில் வாழ்ந்து வருவாய்...

Wednesday 5 October 2011

July 25

ஜூலை 25

என் கண்கள் அன்று தான்
முதன் முறையாக எனக்காக அழுதன....
தற்கொலை ஒரு முட்டாள் தனம்
இருந்தும் அதன் கதவையும் தட்டி விட்டு தான் வந்தேன் ...
அவளிடம் பேச வார்த்தைகள் கிடைக்காதா என தேடிய என் உதடுகள்
அன்று வெட்டு பட்டு நின்றன....  காரணம் 
என் காதுகள் அதிர்ந்தன... 
அன்பாய் பேசிய அவளது வார்த்தைகள்...
அன்று என் மரியாதையை காபற்றிக்க சொல்லியது...
மனம் கலங்கியது... 
அவளிடம் கேட்டால்.. .
முடிவு செய்துவிட்டேன் என்கிறாள்.....
நான் யாரிடமும் கெஞ்சியது இல்லை...
அன்று துடித்து கதறினேன்... ஆனால் அவள் கேட்க தயாராக இல்லை...
வீட்டுக்கு செல்வதற்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் 
என உள்ளம் துடித்தது...
ஜூலை என்னை எல்லாவற்றில் இருந்தும் மீட்டு எடுக்கும் மாதம்...
அன்று எனது உயிரையும் காப்பற்றியது...
இதுவும் கடந்து போகும் என்று இருந்தாலும் ...
அவளது நினைவுகள் என்னை கொன்று புதைத்து...
இன்றும் அவள் நினைவுகள் எனக்குள் அப்படியே தான் இருகின்றன...
ஆனால் அவளை பொறுத்தவரையில் நான் இன்று  கெட்டவன்...
பேசுவதருக்கு நேரம் கேட்டு ஆசை பட்டதற்கு....
இழிவு பேச்சு என தொடங்கி பிறகு கழற்றி விடப்பட்டேன்...
வேதனைகள் சூழுந்து கவனம் சிதறி வெறுப்புடன்....
இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகின்றேன்...
துயரத்தில் நான் பேசும் வார்த்தைகள் கூட பொய் என்று தான் நினைப்பாள்.....
துடிக்கும் இந்த தருணங்கள் என்று அடங்கும்....
தவிப்புடன் நான் சிந்தும் கண்ணீர் துளிகள் அவளுக்கு வேடிக்கை தான்....
காதல் வென்றாலும், தோற்றாலும்....
ஏமாற்றம், துன்பம்,  துயரம்...
இறுதியில் மரணம்....
இது ஆண்களுக்கு மட்டுமே...
இருந்தால் மீண்டும் சந்திப்போம்.....................................................................