Wednesday 5 October 2011

July 25

ஜூலை 25

என் கண்கள் அன்று தான்
முதன் முறையாக எனக்காக அழுதன....
தற்கொலை ஒரு முட்டாள் தனம்
இருந்தும் அதன் கதவையும் தட்டி விட்டு தான் வந்தேன் ...
அவளிடம் பேச வார்த்தைகள் கிடைக்காதா என தேடிய என் உதடுகள்
அன்று வெட்டு பட்டு நின்றன....  காரணம் 
என் காதுகள் அதிர்ந்தன... 
அன்பாய் பேசிய அவளது வார்த்தைகள்...
அன்று என் மரியாதையை காபற்றிக்க சொல்லியது...
மனம் கலங்கியது... 
அவளிடம் கேட்டால்.. .
முடிவு செய்துவிட்டேன் என்கிறாள்.....
நான் யாரிடமும் கெஞ்சியது இல்லை...
அன்று துடித்து கதறினேன்... ஆனால் அவள் கேட்க தயாராக இல்லை...
வீட்டுக்கு செல்வதற்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் 
என உள்ளம் துடித்தது...
ஜூலை என்னை எல்லாவற்றில் இருந்தும் மீட்டு எடுக்கும் மாதம்...
அன்று எனது உயிரையும் காப்பற்றியது...
இதுவும் கடந்து போகும் என்று இருந்தாலும் ...
அவளது நினைவுகள் என்னை கொன்று புதைத்து...
இன்றும் அவள் நினைவுகள் எனக்குள் அப்படியே தான் இருகின்றன...
ஆனால் அவளை பொறுத்தவரையில் நான் இன்று  கெட்டவன்...
பேசுவதருக்கு நேரம் கேட்டு ஆசை பட்டதற்கு....
இழிவு பேச்சு என தொடங்கி பிறகு கழற்றி விடப்பட்டேன்...
வேதனைகள் சூழுந்து கவனம் சிதறி வெறுப்புடன்....
இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகின்றேன்...
துயரத்தில் நான் பேசும் வார்த்தைகள் கூட பொய் என்று தான் நினைப்பாள்.....
துடிக்கும் இந்த தருணங்கள் என்று அடங்கும்....
தவிப்புடன் நான் சிந்தும் கண்ணீர் துளிகள் அவளுக்கு வேடிக்கை தான்....
காதல் வென்றாலும், தோற்றாலும்....
ஏமாற்றம், துன்பம்,  துயரம்...
இறுதியில் மரணம்....
இது ஆண்களுக்கு மட்டுமே...
இருந்தால் மீண்டும் சந்திப்போம்.....................................................................

1 comment: