Saturday 29 October 2011

அவள்...


உறக்கம் கூட பொய்த்து போயின
உன் உரையாடல் நீண்ட போது....
கண்களும் இமைக்க மறுத்தன 
உன் விழி இரண்டில் நான் தெரிந்த போது...
கடல் அலைகளும் அழகிய கவிதை என எடுத்து சென்றன
உன் பெயரை கரையோரம் நான் எழுதிய போது...

சுவடுகள்


கனவு வானில் கற்பனை உலகில்
என்னுள் வந்து மனச் சிறகையும் தந்து 
பறக்க எண்ணிய வண்ணம்
சிறகுகளை கேட்கிறாய்...
முயற்சித்தேன், முடியாமல் தோற்றேன்...
அழியாத நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கோர்க்கிறேன் 
மாலையாக...

சொல்லித் தெரிவதில்லை...


உள்ளத்தின் கதவரையில் 
உயிரென்னும் தூரிகைக் கொண்டு
நான் வரைந்த முதல் ஓவியம் உன் முகம் தான்...
உன் பிறப்பு யாருக்காக என்று தெரியவில்லை
ஆனால்,
நான் வாழ்வது உனக்க மட்டும் தான்...

நினைவுகள்


பசுமையான நினைவுகள் 
என் மனதில் உன்னை பற்றி சேதி சொல்ல,
வெண்ணிலவே ,
நீ தொடும் தூரத்தில் இல்லை என்றாலும்,
அவள், உன்னை பார்க்கும் நேரத்தில்
என்னை பற்றி எண்ணச் செய்...

இன்னும் ஒரு முறை...


சொல்ல நினைத்த சொற்கள் தடுமாறிய போதும்
விழிகள் அவற்றை கண்டு கொண்டன...
சிதறும் புன்னகையும் சட்ட்று நெளிந்த போதும்
அன்பு அவற்றை கவிதையாகவே எடுத்துக் கொண்டன...
ஆயிரம் வார்த்தைகள் சொல்லியும் கேட்கவில்லை என்ற போதும்
இன்னும் ஓராயிரம் வார்த்தைகளில் தொடர்கிறது...

அலைகள்....

அலைகள்....
என் உள்ளத்தில் துன்பத்தின் சாரல் மழையாக பொங்கும் வேலை,
விலகி நிற்கும் உனக்குள்ளும் சாரல்கள் அடிக்குமா?
மனதை விட்டு 
என் நினைவுகள் உன்னை விட்டு அகன்ற போதிலும்,
உன்னைப் பற்றிய நினைவுகள் 
எனக்குள் சுவடுகளாய் விட்டுச் சென்றதற்கு நன்றி.....

Saturday 22 October 2011

நீ தான்...


நீ தான்...

உன் கண்களில்
சூரிய, சந்திரர்கள் இல்லை,
உன் பேச்சு நடையில் 
தென்றல் தவழ்ந்து வரவில்லை,
உன் சொற்களில் 
இசை எழுவதும் இல்லை,
இருந்தபோதும் 
நான் காணும் கனவுகளில் தோன்றினாய்,
நான் சுவாசிக்கும் காற்றில் 
இரண்டறக் கலந்து வந்தாய்,
என்றும் என்னுடன்,
என் உள்ளத்தில் வாழ்ந்து வருவாய்...