Saturday 22 October 2011

நீ தான்...


நீ தான்...

உன் கண்களில்
சூரிய, சந்திரர்கள் இல்லை,
உன் பேச்சு நடையில் 
தென்றல் தவழ்ந்து வரவில்லை,
உன் சொற்களில் 
இசை எழுவதும் இல்லை,
இருந்தபோதும் 
நான் காணும் கனவுகளில் தோன்றினாய்,
நான் சுவாசிக்கும் காற்றில் 
இரண்டறக் கலந்து வந்தாய்,
என்றும் என்னுடன்,
என் உள்ளத்தில் வாழ்ந்து வருவாய்...

2 comments: