Monday 1 August 2011

ஏமாற்றம்

ஏமாற்றம்
                                         
 கடல் போல் எல்லையில்லாதது எனது கனவு
நான் அவளை காணாது வரை
என் பெற்றோரை கூட நான் நம்பியதில்லை 
நான் அவளை நம்பினேன் 
உணவு, தூக்கம் என அனைத்தையும் மறந்தேன் 
நான் அவளிடம் பேசும் வரை 
உலகை ரசிப்பது போல் அவள் வார்த்தைகளை ஏற்றேன்
ஆனால் கோவம் தான் அவளுக்கு முக்கியமாம்
கோவத்தில் கூறிய செய்திகளை ஏற்கிறாள்
உள்ளத்தில் இருந்து கூறும் வார்த்தைகளை நம்ப மறுக்கிறாள்
நஞ்சை விட கொடியதாம் என் வார்த்தைகள்
அதனால் தான் என்னவோ என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டால்
முள்ளை கூட கண்ணில் வைத்தால் தாங்கிக் கொள்ளலாம்
உயிர் தாளாமல் துடிப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை....

2 comments: